யாழ். அரியாலை, மாம்பழம் சந்திப் பகுதியில் வீடு ஒன்றில் பகல் வேளையில் ஓடு பிரித்து இறங்கிய திருடர்கள் அங்கிருந்த பெறுமதியான பொருட்களைத் திருடிச் சென்றுள்ளனர்.
பொருட்களை எடுத்துச் சென்ற திருடர்கள் மீண்டும் அதே வீட்டிற்கு அதே பகல் பொழுதில் திரும்பி வந்து வீட்டிற்குள் நுழைவதைக் கண்ட அயலவர்கள் அந்தச் சந்தியில் நிலை கொண்டு இருக்கும் இராணுவத்தினரின் உதவியுடன் திருட்டுப் பொருட்களுடன் அவர்களைப் பிடித்திருந்தனர்.
திருட்டுப் பொருட்களைச் சுமந்த வண்ணம் சுலோக அட்டைகளையும் ஏந்தியவாறு இவர்கள் ஊர்வலமாக அந்தப் பகுதிவீதியில் அழைத்துச் செல்லப்பட்டனர்.
வீட்டுக்காரர்கள் குடும்பமாகக் கொழும்புக்கு சென்றிருந்ததை அறிந்த திருடர்கள் இந்தத் துணிகரமான திருட்டை நடத்திய போதும் அகப்பட்டு விட்டனர்.