வலிகாமம் வடக்கு, வலி காமம் தெற்குப் பகுதிகளில் நேற்று திடீரென ஏற்பட்ட அதிகளவான பனி மூட்டத்தால் அப்பகுதி மக்கள் அச்ச மடைந்தனர்.யாழ்.மாவட்டத்தில் தற்போது இரவு வேளைகளில் அதிகளவான பனி பெய்து வருகின்றது. இந்நிலை யில் நேற்றுக் காலை மேற்குறித்த இடங்களில் அதிகளவான பனி மூட்டம் காணப்பட்டது. என்றுமில்லாதவாறு காணப் பட்ட அதிகளவான பனிமூட்டத் தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.
அருகில் நிற்பவர்களைக் கூட கண்டு கொள்ளமுடியாதவாறு பனிமூட்டம் காணப்பட்டதாக அப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.