வேலணை மத்திய கல்லூரியின் பழைய மாணவரான செல்வநாயகம் அகீபன்(வயது 23) தமிழ்நாட்டு உதைபந்தாட்ட அணியில் இடம்பிடித்துள்ளார்.
வேலணை துறையூரைப் பிறப்பிடமாகக் கொண்டவரும், ஐயனார் விளையாட்டுக்கழக உதைபந்தாட்ட அணியின் சகலதுறை வீரருமான இவர், சென்னை தேனாம்பேட்டையிலுள்ள வை.எம்.சி.ஏ.பல்கலைக்கழகத்தில் உடற்பயிற்சிப் பிரிவில் இரண்டாம் பிரிவில் படித்துக்கொண்டிருக்கும் மாணவராவார்.
தமிழ்நாட்டில் அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கு இடையில் நடைபெற்ற உதைபந்தாட்டப் போட்டியில் வை.எம்.சி.ஏ பல்கலைக்கழக அணியில் பங்குபற்றி தனது முழுமையான ஆட்டத்தை வெளிக்காட்டியதாலேயே இவர் தமிழக அணியில் இடம்பிடித்துள்ளார்.
– தீவகன்