கோப்பாய் திருநெல்வேலிப் பகுதியில் நேற்று இரவு 9.45 மணியளவில் ரயில் தண்டவாள இரும்புகளை கடத்திய குற்றச்சாட்டின் பேரில் 7 சந்தேக நபர்கள் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,திருநெல்வேலி அம்மன் ஆலயத்திற்கு அருகில் சங்தேகத்திற்கிடமாக பயணித்துக் கொண்டிருந்த லொறியொன்றை காவற்துறையினர் சோதனையிட்டனர்.
இதன்போதே,குறித்த லொறியில் சட்டவிரோதமாக ஏற்றிச் செல்லப்பட்ட 13 அடி நீளமுடைய வெட்டப்பட்ட,126 தண்டவாள இரும்புகளை கைப்பற்றியுள்ளதாக கோப்பாய் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், லொறியில் இருந்து கைது செய்யப்பட்ட 7 பேரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களே எனவும், சந்தேக நபர்கள் இன்று யாழ். நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக காவற்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.