Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » செல்வச்சந்நிதியானிடம் கைவைத்தனர் திருடர்

தொண்டமனாறு செல்வச்சந்நிதியான் ஆலயத்தில் வெள்ளியிலான இரண்டு நாகதம்பிரான் திருட்டுப்போனதாக நிர்வாக சபையினர் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று முன்தினம் நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக தெரிவிக்கையில் காலையில் பூசைக்காக ஆலயம் திறக்கப்பட்டபோது சிலைகள் இருந்ததாகவும் பின்னர் நண்பகல் வேளை பூசையின் போது காணப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

இதன் பெறுமதி 5 இலட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com