Subscribe:Posts Comments

You Are Here: Home » ஏனயவை, யாழ்.செய்திகள் » செப்டெம்பர் மாதம் யாழ்ப்பாண புகையிரதப்பாதை புனரமைப்பு நிறைவுபெறும்

Yal Devi trainயாழ்ப்பாண புகையிரதப்பாதை புனரமைப்பு பணிகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நிறைவுபெறும் என இந்திய துணைதூதுவர் மகாலிங்கம் தெரிவித்தார்.
இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணத்திற்கான புகையிரதப்பாதை புனரமைப்புப் பணிகள் தண்டவாளங்களுக்கிடையில் இடைவெளியில்லாமல் மிகவும் உயர்த்தொழில்நுட்ப முறையில் அதற்கான வேலைகள் நடைபெற்றுவருகின்றன. இப் புகையிரதப்பாதையில் நாவற்குழியிலும், ஆனையிறவுப் பகுதியிலும் பாலங்கள் அமைக்கவேண்டியுள்ளதால் அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அத்துடன் காங்கேசன்துறை துறைமுக புனரமைப்பு பணியின் இரண்டாம் கட்டம் நிறைவுபெற்று விட்டது என தெரிவித்தார். மேலும்

பாலாலி விமானத்தளத்தின் 850 மீற்றர் ஓடுபாதை இந்திய அரசாங்கத்தினால் புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளது. இன்னமும் 500 மீற்றர் பாதை புனரமைக்கப்படுமாயின் பெரிய விமானங்கள் வந்து செல்க்ககூடிய வாய்ப்பு ஏற்படும் எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

 
© 2013 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com