Subscribe:Posts Comments

You Are Here: Home » ஏனயவை, யாழ்.செய்திகள் » சுழிபுரம் விக்டோறியாக்கல்லூரி மாணவர்களுக்கான நாடகப் பயிற்ச்சிபட்டறை(படங்கள்)

சுழிபுரம் விக்டோறியாக்கல்லூரி மாணவர்களுக்கான அரங்கத்திறன் விருத்தி நாடகப் பயிற்ச்சிபட்டறை நிகழ்வு சுழிபுரம் விக்டோறியாக்கல்லூரி பிரதாண மண்டபத்தில் நடைபெற்றது. புத்தாக்க அரங்க இயக்கத்தினால் நடாத்தப்பட்ட இப்பயிற்சி பட்டறை நிகழ்வின் வளவாளர்களாக புத்தாக்க அரங்க இயக்கப்பணிப்பாளரும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி நாடகத்துறை ஆசிரியருமான எஸ்.ரி.குமரன் புத்தாக்க அரங்க இயக்கத்தின் நிர்வாகப்பணிப்பாளரரும் மானிப்பாய் இந்துக்கல்லூரி நாடகத்துறை ஆசிரியருமான எஸ்.ரி.அருள்குமரன் ஆற்றுகையாளர் எஸ்.லோன்சன் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்ச்சி பட்டறையை திறம்பட வழிநடாத்தினார்கள்

இப்பயிற்றசி பட்டறையில் நாடகத் தயாரிப்பு படிமுறை அரங்கத்திறன் விருத்தி ஆளுமை வளர்ச்சிசார் பயிற்சிகள் மாணர்களுக்கு வழங்கப்பட்டது. இப்பயிற்ச்சி பட்டறையில் தரம் 6 தொடக்கம் உயர்தரம் வரையான 50 மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

பயிற்சி பட்டறை நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்கள் இப்பயிற்ச்சி பட்டறை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போது மிகவும்பயனுள்ள முறையில் அமைந்ததுடன் புதிய அனுபவங்களையும் அரங்கியல் சார் நுட்பங்களையும் அறிந்து கொள்ள முடிந்துள்ளதாக தெரிவித்தார்கள்.


Leave a Reply

 
© 2012 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com