கடந்த 16 வருடங்களாக இராணுவத்தின் 51ஆவது படையணியின் தலைமையக மாக பயன்படுத்தப்பட்ட யாழ்.சுபாஸ் ஹோட் டல் அதன் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.தனியார் சொத்துக்களை இராணுவப் பாவனைக்காக வைத்திருத்தல் தொடர்பாக அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட அறிவுறுத் தலின்படி இக் கட்டிடம் உரிமையாளர்களிடம் கையளிக்கப் பட்டதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவல தெரிவித்தார். யாழ். உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் அமைந்துள்ள இந்தக் ஹோட்டல் 1995ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் திகதி இராணுவத் தினரால் குத்தகைக்கு பெறப்பட்டது.
You Are Here: Home » யாழ்.செய்திகள் » 16 வருடங்களின் பின் சுபாஸ் ஹோட்டல் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டது