Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » சிற்றூர்திகள் சேவை தற்காலிக இடமாற்றம்

தேசிய அனர்த்த பாதுகாப்பு தினம் யாழ்.நகரில் நடத்தப்படவுள்ளதால் யாழ்.முற்றவெளி பகுதியில் தரித்துநின்று சேவையில் ஈடுபடும் தனியார் சிற்றூர்திகள் மற்றும் யாழ்ப்பாணம்- கொழும்பு சேவையில் ஈடுபடும் பேருந்துகள் நாளையும் நாளை மறுதினமும் யாழ்.நகரப்பகுதியில் வீதி ஒழுங்கினைக் குலைக்காதவகையிலும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தா வகையிலும் நகரப்பகுதியில் தரித்துநின்று சேவையில் ஈடுபடுமாறு யாழ். மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ரூபினி வரதலிங்கம் அறிவித்துள்ளார்.

இதேவேளை மேற்படி தினங்களில் முற்றவெளி பஸ்தரிப்பு நிலையத் திலிருந்து சிற்றூர்திகள் உள்ளூர் சேவையில் ஈடுபடுவதும், பேருந்துகள் கொழும்பு மற்றும் பிற மாவட்டங்களுக்கான சேவையில் ஈடுபடுவதும் முற்றாகத் தடைசெய்யப்படுவதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. இத்தினங்களில் சகல சிற்றூர்தி, பேருந்துகளின் சாரதிகள் யாழ்.பஸ் நிலையத்திலிருந்தே மேற்படி சேவைகள் மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

 
© 2010 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com