Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » சிறுமி கொலை செய்யப்பட்ட பின்னரே கிணற்றில் வீசப்பட்டுள்ளார்- மருத்துவ அறிக்கை

சுழிபுரம் மத்தியிலுள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட 8 வயதுச் சிறுமி கொலை செய்யப்பட்ட பின்னரே கிணற்றில் வீசப்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுழிபுரம் பாண்டவெட்டை காட்டுப்புலம் மகாவித்தியாலயத்தில் கற்கும் கிருஷ்ண மூர்த்தி சாலினி என்ற எட்டு வயதுச் சிறுமியே இவ்வாறு மீட்கப்பட்டவராவார். இந்தச் சிறுமி கடந்த 17 ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்தமை தொடர்பில் வட்டுக்கோட் டைப்  பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் குறித்த சிறுமியின் சடலம் அவரின் வீட்டிலிருந்து 2 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத காணி ஒன்றில் பாழடைந்த கிணற் றிலிருந்து ஒரு வாரத்தின் பின்னர் நேற்று முன்தினம் மீட்கப்பட்டுள்ளது.
உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்ட மேற்படி சடலத்தின் உடற்கூற்றுப் பரிசோத னைகள் நேற்று இடம்பெற்றது. பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
மண்டையோட்டின் முன் பகுதியில் கூரிய ஆயுதத்தால் வெட்டப்பட்டமைக்கான பெரியதொரு துவாரம் காணப்படுகின்றது. எனவே கொலை செய்யப்பட்ட பின்னரே சடலம் கிணற்றில் வீசப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சடலம் உருக்குலைந்திருப்பதால் கடந்தப்பட்ட அன்றைய தினமே கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டிருக்க வேண்டுமென்றும் அத்துடன் இடுப்பு பகுதிக்கு கீழே எதுவித ஆடைகளும் இல்லாதிருப்பதால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப் பட்டிருக்கலாம் எனவும் உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-உதயன்

Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com