யாழ்.பல்கலைக்கழக சித்தமருத்துவ பிரிவு வெள்ளி விழா நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 9மணி தொடக்கம் 5 மணிவரை கைதடி சித்த மருத்துவப் பிரிவு அரங்கத்தில் டாக்டர் ஐ.ஜெபநாமகணேசன் தலை மையில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, சிறப்பு விருந்தினராக யாழ்.பல்கலைக்கழக துணை வேந்தர் என்.சண்முகலிங்கன்,யாழ்.பல்கலைக்கழக கைதடி சித்தமருத்துவப் பிரிவுத் தலைவி திருமதி திலகேஸ்வரி குமுதரஞ்சன்,நாவின்னை மகரகம ஆயுர்வேத திணைக்கள ஆணை யாளர் பி.எஸ்.கே.ஆர். வீரக்கோன் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இவ்விழாவில் 25வருடகாலம் தொடர்ந்து சித்தமருத்துவத்துறை யில் சேவையாற்றியவர்களை கெளரவித்தல்,25 வருட கால சேவை பூர்த்தியாக முதல் இளைப்பாறிய உத்தியோகத்தர்களை கெளரவித்தல் உள்ளிட்ட பல விடயங்கள் இடம் பெறவுள்ளன.