யாழ்.சாவகச்சேரி கெற்பேலிப்பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் முச்சக்கர வண்டியில் வந்த இனம் தெரியாத நபர்களினால் கடந்த வெள்ளிக்கிழமை கடத்தப்பட்டுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
கா.பொ.த சாதாரண தரத்தில் கல்வி பயிலும் 16 வயதுடைய பாடசாலை மாணவியே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக அவரது தாயார் பொலிஸ் நிலையத்தில் செய்யத முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது
பாடசாலையில் நடைபெற்று வரும் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த நிலையில் இவர் கடத்தப்பட்டுள்ளதாக கொடிகாமப் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.