சாவகச்சேரி இந்துக் கல்லூரிக்கு 40 லட்சம் ரூபா பெறுமதியான பஸ் கையளிப்பு நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை இடம் பெற்றது.
ஸ்தாபகர் தாமோதரம் பிள்ளையின் வழித்தோன்றல்களான ச. சிறிகுமார் தம்பதி யினரால் வழங்கப்பட்ட இந்த பஸ்ஸினை சரவணமுத்து தாமோ தரம்பிள்ளை கல்லூரி அதிபர் அ.கயிலாயபிள்ளையிடம் உத்தி யோகபூர்வமாகக் கையளித்தார்.
கல்லூரி அதிபரின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் வைத்தியக் கலாநிதி த. குகதாஸன், கல்லூரி பழைய மாணவர் சங்க செயலாளர் யோ. ஜெயக்குமார், கல்லூரி ஆசிரிய சகோதரத்துவ செயலாளர் ந. றீகரன், சிரேஷ்ட மாணவ தலைவர் செல்வன் சி. சசிதரன், சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்றத் தலைவர் வ. ஸ்ரீபிரகாஸ், தென்மராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் கு. பிரேமகாந்தன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.