யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கிச் பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற மினி பஸ்ஸின் சாரதி கையடக்கத் தொலைபேசியில் கதைத்துக் கொண்டு சென்றதால் விபத்திற்குள்ளாகியது.
இவ்விபத்துச் சம்பவம் யாழ்.கோப்பாய் சந்திக்கு அருகாமையில் இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சாரதி கையடக்கத் தொலைபேசியில் உரையாடிக் கொண்டு சென்றதால் வாகனத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமால் வாகனம் மதிலுடன் மோதி விபத்திற்குள்ளானதில் 20 மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் உடனடியாக கோப்பாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நன்றி – யாழ் மின்னல்