Subscribe:Posts Comments

You Are Here: Home » ஏனயவை, யாழ்.செய்திகள் » சாட்டி மாதா பெருவிழாவில் பெரும் எண்ணிக்கையான பக்தர்

நேற்று நடைபெற்ற சாட்டி சிந்தாத்திரை மாதா யாத்திரை ஸ்தலத்தின் வருடாந்த பெரு விழாவில் பெரும் எண்ணிக்கையான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
யாழ். ஆயர் மேதகு தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை தலைமையில் நேற்று நடை பெற்ற திருவிழாத் திருப்பலியில் கத்தோலிக்க மக்களுடன், இந்து மக்களும் கலந்து கொண்டு மாதாவின் ஆசியை வேண்டிப் பிரார்த்தித்தனர்.

தீவுப் பகுதியில் இருந்தும் யாழ்ப்பாணப் பகுதிகளிலிருந்தும் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவிழாவில் கலந்து கொண்டனர். திருவிழாத் திருப்பலி காலை 9 மணி வரை நடைபெற்று காலை 9 மணிக்கு மாதாவின் திருச்சொரூபப் பவனி இடம் பெற்றது.
உற்சவத்தையொட்டி வேலணை பிரதேச செயலகம், வேலணை பிரதேசசபை என்பன பங்குத் தந்தை அருட்திரு ஸ்ரனிஸ்லஸ் பிலிப் அடிகளின் உதவியுடன் யாத்திரிகர்களின் வசதிக்காக சுகாதாரம், குடி தண்ணீர், தொண்டர் சேவைகளை ஒழுங்குபடுத்தியிருந்தன.வடபிரதேச போக்குவரத்துச் சபை, தனியார் போக்குவரத்துச் சங்கம் என்பன பொது மக்களின் போக்குவரத்து வசதிகளை மேற்கொண்டன.

Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com