Subscribe:Posts Comments

You Are Here: Home » ஏனயவை, யாழ்.செய்திகள் » சந்நிதி முருகனுக்கு இன்று தேர்த்திருவிழா

வரலாற்றுப் புகழ்மிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய இரதோற்சவம் இன்று காலை நடைபெறுகின்றது.

இன்று காலை இரதோற்சவமும். நாளை  தீர்த்தோற்சவமும் நடைபெறவுள்ளது.

அதேவேளை இன்று நடைபெறவுள்ள இரதோற்சவத்தில் பக்தர்களின் வசதிக்காக யாழ்ப்பாணம், பருத்தித்துறை பஸ் டிப்போவிலிருந்து பல போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பொதுமக்கள் பெருமளவில் கூடும் இடங்களில் திருடர்களின் தொல்லை அச்சுறுத்தலாக இருப்பதால் அடியார்கள் தங்கநகைகளை அணிந்து வருவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com