Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » சந்நிதியான் தீர்த்தோற்சவத்தை தரிசிக்க சென்றவர் நீரில் மூழ்கிப் பலி

செல்வச் சந்நிதியானின் தீர்த்த உற்சவத்தில் கலந்து கொள்வதற்காக சென்றவர் தொண்டமனாறு  கடலில் மூழ்கிப் பலியாகிய சம்பவம் ஒன்று இன்று காலை நடைபெற்றுள்ளது.

ஆச்சிரம லேன் இணுவில் கிழக்கைச் சேர்ந்த இராசமனோகரன் மகிதன் [23வயது] என்பவரே நீரில் மூழ்கிப் பலியானவராவார்.

காலை 7.30 மணியளவில் குறித்த நபர் தொண்டமனாறு  கடலில் நீராட சென்ற வேளை  மக்கள் பாவனைக்காக நிர்ணயிக்கப்பட்ட எல்லையினைத் தாண்டிச் சென்று நிராடிய இவர் சுழியில் அகப்பட்டு மரணமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபரின் சடலத்தை கடற்படையினர், பொலிஸார் மற்றும் நீச்சல் தெரிந்த வல்வெட்டித்துறை, தொண்டமனாறு இளைஞர்களும் இணைந்து 11மணியளவில் மீட்டுள்ளனர்

மீட்கப்பட்ட சடலம் சந்நிதி கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக வைத்திய முகாமில் வைக்கப்பட்டதோடு, அவர் இறந்ததனையும் வல்வெட்டித்துறை வைத்திய அதிகாரி மயிலேறும் பெருமாள்  உறுதி செய்தார்.

இவரின் சிறிய தந்தையார் நீரில் மூழ்கி மரணமடைந்தவர்  தனது பெறாமகன்  என உறுதி செய்துள்ளார்.

தற்போது சடலம் பிரேத பரிசோதனைக்காக வல்வெட்டித்துறை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com