Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » சந்தேகத்திற்கிடமாக நடமாடிய நால்வர்பொதுமக்களால் மடக்கிப் பிடிப்பு

சங்கானை முருகமூர்த்தி பிள்ளையார் கோயிலுக்கு அண்மையாக நேற்று மாலை சந்தேகத்திடமாக நடமாடிய நான்கு இளைஞர்களைப் பொதுமக்கள் மடக்கிப் பிடித்து நையப்புடைத்து மானிப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

குறித்த நான்கு இளைஞர்களும் வீதியில் செல்லும் பெண்களுடன் சேஷ்டை உள்ளிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என மானிப்பாய் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது சங்கானை முருகமூர்த்தி பிள்ளையார் கோயிலுக்கு அண்மையாக சந்தேகத்திற்கு இடமான முறையில் நான்கு இளைஞர்கள் பொதுமக்களால் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டனர். இவ் இளைஞர்களில் இருவர் சரளமாக சிங்கள மொழியில் பேசியதாகவும் நால்வரும் வீதியில் பயணிக்கும் பெண்களுடன் சேஷ்டை மற்றும் பல்வேறு குற்றச் செயல்களில் தொடர்புடையவர்கள் எனத் தெரிவித்து மானிப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் குறித்த நான்கு இளைஞர்களையும் தடுத்து வைத்து விசாரணை செய்துவருகின்றனர்.

Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com