சட்டவிரோத மின் பாவனையில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் யாழ். நகர பகுதியில் 56 சட்டவிரேத மின் பாவனையாளர்கள் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பில் இருந்து வருகை தந்த இலங்கை மின்சார சபையின் விசேட மின் பரிசோதனையாளர் குழுவினரும் யாழ். பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட தேடுதலின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
தற்போது யாழ். பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டள்ள இவர்கள் அனைவரும் நாளை திங்கட் கிழமை யாழ். மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக யாழ். பொலிஸ் நிலைய தலமைப் பொலிஸ் அதிகாரி சமன் சிகேரா தெரிவித்துள்ளார்.