மோட்டார் சைக்கிளில் வந்த இரு திருடர்கள் பெண் ஒருவரின் சங்கிலியை அறுத்துக் கொண்டோடிய சம்பவம் நேற்று மானிப்பாய் ‘மாப்பியன்’ மில் ஒழுங்கையில் இடம்பெற்றது.
தனியாக அவ்வழியால் வந்து கொண்டிருந்த குறிப்பிட்ட பெண்ணை திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளையர்கள் வழிமறித்து அப் பெண் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடினர். அப் பெண் குக்குரல் இடவே அவ்வழியால் வந்து கொண்டிருந்த இன்னொரு இளைஞர் விபரம் அறிந்து இவர்களை தேடிச் சென்ற போது சில கிலோமீற்றர் தூரத்தில் இவர்கள் நிற்பதை கண்டு இவர்களின் மோட்டார் சைக்கிள் இலக்கத்தை குறித்துக் கொண்டு வந்து பெண்ணிடம் கையளித்துள்ளார்.பெண்ணும் உடனடியாகவே அந்த இளைஞருடன் காவல்துறையிடம் சென்றபோது சம்பவ இடத்துக்கு இவர்களையும் கூட்டிக் கொண்டு விரைந்த காவல்துறை திருடர்கள் இருவரையும் கைது செய்து சங்கிலியையும் மீட்டது.