கோப்பாய் இராச வீதியில் அமைந்துள்ள உலக உணவுத் திட்டத்துக்குச் சொந்தமான உணவுக் களஞ்சியத்தில் நேற்றுப் பிற்பகல் பெரும் தீவிபத்து இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதனால் அங்கிருந்த சில உணவுப் பொருள்கள் தீயில் எரிந்து நாசமானதாக அதனை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
உலக உணவுத் திட்டத்தினால் குடாநாட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் நிவாரண நடவடிக்கைகளுக்குத் தேவையான உணவுப் பொருள்களைக் களஞ்சியப் படுத்துவதற்காக இந்தக் களஞ்சியம் பயன்படுத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்றுப் பிற்பகலில் இந்தக் களஞ்சியத்தின் ஒரு பகுதி தீப்பற்றி எரிந்ததாகவும், அதனை அணைக்க அங்கு நின்ற மக்கள் முன்வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
எனினும் பின்னர் பவுசர் வாகனங்களில் இருந்து தண்ணீர் விசிறப்பட்டே தீ கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும், இதன் போது அங்கிருந்த பெருமளவு உணவுப் பொருள்கள் தீயில் கருகியதாகவும் கூறப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் தெரியவரவில்லை.