கைதடி நோக்கி மானிப்பாயிலிருந்து சென்ற பெற்றோல் பவுசரும் நீர்வேலியிலிருந்து யாழ் நோக்கிச் சென்ற பல்சர் ரக மோட்டார்சைக்கிளும் கோப்பாய் சந்தியில் விபத்துக்குள்ளாகின. இவ் விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் காலில் பலத்த காயமடைந்து கோப்பாய் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவத்தில் நீர்வேலியைச் சேர்ந்த ஞானசேகரம் பிரதிப் வயது 20 என்பவரே காயமடைந்தவராவார்.
(படங்கள்- Thusitharan)