கொழும்பு பல்கலைக்கழக தமிழ்சங்கம் நடாத்திய மாவட்ட மட்ட நாடகப் போட்டியில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் இருளினை நீக்கி எனும் நாடகம் மூன்றாம் இடத்தினைப்பெற்றுக்கொண்டது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் றொமைன் குக் மண்டபத்தில் இடம்பெற்ற மேற்படி போட்டியில் மத்தியகல்லூரி வெற்றிபெற்றது.
இந்நாடகமானது நாடகமும் அரங்கியலும் ஆசிரியர் எஸ்.ரி.குமரனின் எழுத்துருவாக்கம் நெறியாள்கையில் ஆற்றுகை செய்யப்பட்டது. காட்சியமைப்பினை பிரவீனும் இசையினை ஏ.நிலக்ஷ்னும் மேற்கொண்டார்கள்.
நடிகர்களாக தயாநிசன்,கவிராஜ், பிரவீன், பிரசாந், யெனிற்றன், அபிஷேக், தர்மிசன், சண்முகப்பிரியன், ஆகியோர் செயற்ப்பட்டார்கள். இப்போட்டியின் மூலம்யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி நீண்ட இடைவெளிக்கு பின்பு மாவட்டப் போட்டியொன்றில் வெற்றி பெறுவது குறிப்பிடத்தக்கது.