Subscribe:Posts Comments

You Are Here: Home » ஏனயவை, யாழ்.செய்திகள் » கொழும்புக்கு தாமதமாகச் செல்லும் யாழ் பஸ்கள்

யாழ்ப்பாணம் பண்ணை பஸ் நிலையத்திலிருந்து கொழும்பு நோக்கி சேவையில் ஈடுபட்டு வரும் தனியார் பஸ்களில் பல தாமதமாகப் புறப்பட்டு பயணிகளை அவர்களின் இருப்பிடங்களை தேடி ஏற்றிவருவதால் இந்த பஸ்கள் கொழும்பை வந்தடைவதற்கு காலதாமதம் ஏற்படுகிறது.

இந்த பஸ்கள் புறப்பட்டு குருநகர், நல்லூர், அரியாலை, கொழும்புத் துறை, பாஷையூர் போன்ற இடங்களுக்கு சென்று பயணிகளை ஏற்றுக்கின்றன. இவ் விடங்களில் இருந்து யாழ். பஸ் நிலையத்துக்கு ஆட்டோவில் வருவதற்கு 250 ரூபா, 300 ரூபாவை பயணிகள் கட்டணமாகச் செலுத்த வேண்டியுள்ளது.

அத்துடன் பயணப் பொதிகளையும் கொண்டு வரவேண்டியுள்ளதால் ஆட்டோக்களுக்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. இதனால் இப் பயணிகளின் வீடுகளுக்கு அருகில் இந்த பஸ்கள் சென்று ஏற்றிவருவதால் கொழும்பை காலை 8 மணியளவிலேயே சென்றடைகின்றன.
இதேநேரம் யாழ். பஸ் நிலையத்திலிருந்து கொழும்புக்கு சேவையில் ஈடுபடும் இ.போ.ச. பஸ்கள் நேரத்துடன் மறுநாள் காலை கொழும்பை சென்றடைகின்றன.

Leave a Reply

 
© 2012 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com