யாழ்.கொக்குவில் இந்து மகளீர் ஆரம்பப் பாடசாலை வீதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட வயோதிபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்று வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார்.
குறித்த வயோதிபர் வீதியைக் கடக்க முற்பட்ட வேளை மோட்டர் சைக்கிளில் மோதி விபத்துக்குள்ளகியுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று புதன்கிழமை இடம்பெற்ற இச்சபம்வத்தில் கொக்குவிலைச் சேர்ந்த சுப்பிரமணியம் பஞ்சலிங்கம் (வயது 72) எனபவரே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய நபரை கைதுசெய்துள்ளதுடன் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக யாழ்.பொலிஸார் தெரிவித்தனர்.