Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » கொக்குவில் இந்துவில் புலமை பரிசில் பரீட்சை சித்தி பெற்ற மாணவர்களுக்கான பாராட்டுவிழா

யா/கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலையில் 2011ம் ஆண்டு நடைபெற்ற தரம் – 5 புலமை பரிசில் பரீட்சையில் சிறப்பு சித்தியடைந்த 43 மாணவர்களுக்கான பாராட்டுவிழா கடந்த 11- 10 – 2011 ,சுப்பிரமணியம் மாலதி மண்டபத்தில் சிறப்புற நடைபெற்றது.

பிரதம விருந்தினராக யாழ் வலய கல்விப்பணிப்பாளர் திரு. யோகேந்திரா ரவிந்திரன் , விசேட விருந்தினரக திரு. இராஜரட்ணம் இராஜேஸ்வரன் (ஆரம்பக்கல்வி உதவிக் கல்விப்பணிப்பாளர்), விசேட விருந்தினராக செல்வி ஞானலோஜினி சிவஞானம் (பழைய மாணவி , சட்டத்தரணி) அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

2011ம் ஆண்டு நடைபெற்ற தரம் – 5 புலமை பரிசில் பரீட்சையில் பாடசலையில் இருந்து தோற்றிய 181 மாணவர்களில் அனைவரும் அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட சித்திபெறுபேறுகளை பெற்றத்துடன் , 68 மாணவர்கள் 140 புள்ளிகளுக்கு அதிகமாக பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. வெற்றிபெற்ற மாணவர்களை வாழ்த்துவதோடு அவர்கள் வெற்றிக்கு அயராது உழைத்த பெற்றோர்கள் ஆசிரியர்களுக்கும் , அதிபருக்கும் எமது வாழ்த்துக்கள்.
நன்றி:-eகொக்குவில்




Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com