கைதடியில் உள்ள பனை ஆராய்சி நிலையத்திற்கு என இந்திய அரசால் நான்கு பிக்கப் ரக வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. பனை ஆராய்சி தொடர்பான தேவைகளுக் கென வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ் வாகனங்கள் கொழும்பிலிருந்து கைதடியில் உள்ள ஆராய்சி நிலையத்திற்கு தற்போது கொண்டு வரப்பட்டுள்ளது.
போரினால் இவ் ஆராய்சி நிலைய கட்டடம் முற்றாக சேதமடைந்திருந்தது, தற்போது கட்டடம் முற்றாக திருத்தியமைக்கப்பட்டு அடுத்த மாதம் முதல் ஆராய்சி நிலைய பணிகள் ஆரம்பமாக உள்ளன.