குறிகட்டுவான் நெடுந்தீவு பயணிகளின் போக்குவரத்தினை கருத்தில் கொண்டு பாரிய படகொன்று நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மூலம் இப்படகு கொழும்பு துறைமுகத்தில் டொக்யார்ட் நிறுவனத்தின் மூலம் 800 இலட்சம் ரூபா பெறுமதியில் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. இப்படகின் நிர்மாணப் பணிகள் பாதி பூர்த்தியாகியுள்ள நிலையில் மீதிப் பணிகள் வெகுவிரைவில் முடிவுக்கு வரும் என தெரியவந்துள்ளது. இப்படகின் மூலம் குறிகட்டுவான் நெடுந்தீவு இடையிலான பயணிகள் மிகுந்த பயனை அடைவர் என்பதுடன் இப்படகு இலவசப் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.