Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » குரும்பசிட்டிப் பகுதியில் 200 ஏக்கர் பரப்பளவு குடியேறுவதற்கு அனுமதி(படங்கள்)

வலிவடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட குரும்பசிட்டிப் பகுதியில் பாடசாலை மற்றும் நான்கு கோயில்கள்அடங்கலாக 200 ஏக்கர் பரப்பளவு கொண்ட பகுதி நேற்று முன்தினம் மீள் குடியேறுவதற்கான அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு குரும்பசிட்டியிலுள்ள பொன். பரமநாதர் வித்தியாலயத்தில்  நடைபெற்றது. இந்நிகழ்விற்கு யாழ் மாவட்ட இராணுவத் தளபதி ஹத்துருசிங்க, அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

குரும்பசிட்டியின் J242, J243 ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளே விடுவிக்கப்பட்டுள்ளது. எனினும் இப்பகுதி முழுமையாக விடுவிக்கப்படவில்லையென மக்கள் தெரிவிக்கின்றனர்.






Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com