யாழ் மாவட்டத்தில் இழைய வளர்ப்பு வாழைக்குட்டிகளை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை யாழ். விவசாயத் திணைக்களம் மேற்க்கொண்டுள்ளது.
இதற்கான பயிற்சிகளை பெறும் பொருட்டு 30 வாழைச் செய்கையாளரும், 12 விவசாய திணைக்கள உத்தியோகத்தர்களும் அண்மையில் அம்பாந்தோட்டையில் உள்ள விவசாய தொழில்நுட்பம் மற்றும் கிராமிய விஞ்ஞான நிலையத்தில் இரண்டு தினங்கள் பயிற்சி பெற்று திரும்பியுள்ளனர்.
இழைய வளர்ப்பு வாழைக் குட்டிகளை நாட்டி விளைச்சலை அதிகரித்தல், பயனடைதல் தொடர்பாக இப் பயிற்சிகள் இடம்பெற்றுள்ளன.
கொழும்பு பல்கலைக் கழகத்தின் கீழ் தனது உற்பத்தி மற்றும் பயிர்ச் செய்கைகளை இந் நிறுவனம் மேற்கொண்டு வருவதாக தெரிவித்த யாழ். விவசாயத் திணைக்கள பணிப்பாளர் எஸ்.சிவகுமார் பெவ்விகாரையில் அமைந்துள்ள CIC பண்ணையிலும் இவர்களுக்கு மேலதிக பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.