குடாநாட்டில் பரவலாக அமுலில் இருக் கும் மின்வெட்டு நாளை மறுதினம் ஞாயிற் றுக்கிழமையுடன் சீரமைக்கப்படும்.
“நொதேன் பவர்” நிறுவனத்தின் இயந்திரம் மீண்டும் பழுதடைந்துள்ள தாலே இத்தகைய மின்வெட்டு அமுல் படுத்தப்பட்டுள்ளது.
மின்சாரசபையின் வடபிராந்திய பிரதிப் பொதுமுகாமையாளர் ஆர்.முத்துரட்ணா னந்தம் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரி வித்தவை வருமாறு:
“நொதேன் பவர்’ நிறுவனத்தின் இயந்திரம் மீண்டும் பழுதடைந்தமையால் குடாநாட்டில் கடந்த 27 ஆம் திகதி முதல் மின்வெட்டு பலவலாக அமுல்படுத்தப் பட்டது.
பழுதடைந்த இயந்திரம் நாளை சனிக்கிழமை சீரமைக்கப்படும் என்று “நொதேன்பவர்’ நிறுவனத்தினர் எம்மி டம் தெரிவித்துள்ளனர்.
எனவே நாளை மறுதினம் 5 ஆம் திகதிக்கு முதல் மின்சாரம் சீராக வழங் கப்படும். அதுவரைக்கும் பொதுமக்கள் அளவுக்கதிகமான மின்விளக்குகளைப் பாவிப்பதைத் தவிர்ப்பதன் மூலம் மின்வெட்டு நேரம் கணிசமாக குறைக் கப்படும் என்றும் அவர் மேலும் தெரி வித்தார்.
நன்றி: உதயன்