Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » குடாநாட்டிலுள்ள சிறுவர் இல்லங்களில் திடீர் பரிசோதனை நடவடிக்கை

யாழ்.குடாநாட்டில் உள்ள சிறுவர் இல்லங்களைத் திடீர் பரிசோதனை செய்வதற்கான மேற்பார்வைக் குழுக்களைச் சகல பிரதேச செயலகங்களிலும் அமைக்குமாறு யாழ்.அரச அதிபர் அறிவித்துள்ளார்.

அதற்கமைய வடமராட்சி வடக்குப் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சிறுவர் இல்லங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள சிறுவர்களது நலனைக் கருத்திற் கொண்டு அவ் இல்லங்களின் தரத்தினை உயர்த்துவதற்காக அங்கு சென்று திடீர் பரிசோதனை நடாத்தப்படவுள்ளது.

வடமராட்சி வடக்குப் பிரதேச செயலர் இரா.வரதீஸ்வரன் தலைமையில் செயலக மாநாட்டு மண்டபத்தில்  வியாழக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு கலந்துரையாடல் ஒன்று நடாத்தப்பட்டு அதனைத் தொடர்ந்து சிறுவர் இல்லங்களுக்குச் சென்று திடீர் பரிசோதனை நடாத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இக்கலந்துரையாடலில் வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளரையும் தவறாது கலந்து கொள்ளுமாறு பிரதேச செயலர் கேட்டுள்ளார்.

அத்துடன் எதிர்வரும் 12 ஆம் திகதிக்கு முன்னர் திடீர் பரிசோதனையை மேற்கொண்டு அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறும் கேட்கப்பட்டுள்ளது.

Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com