Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » காரைநகரில் மயிரிழையில் தப்பிய மூன்று உயிர்கள்(படங்கள்)

யாழ்.காரைநகர் பொன்னாலைப் பாலத்தில் நேற்று ஆட்டோ விபத்து பயணிகள் இருவர், சாரதியுமாக மூவர் மயிரிழையில் உயிர்தப்பினர்.

யாழ்.காரைநகரிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று சில்லுக் காற்றுப்போனதால் பாலத்தின் கட்டுடன் மோதி விபத்துக்குள்ளானதில் அதனை ஓட்டிய சாரதி, அதனுள் இருந்த இரு பயணிகள் உட்பட மூவர் சிறு காயங்களுள்ளானார்கள்.

இதன்போது சாரதிக்கும் இரு பயணிகளுக்கும் சிறுகாயம் ஏற்பட்டதால் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ் விபத்துத் தொடர்பில் வட்டுக்கோட்டைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

 
© 2012 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com