நேற்று முன்தினம் மாலை காணாமல் போனதாக கூறப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவன் நேற்று இரவு விடுதிக்கு திரும்பியுள்ளதாக அறியவருகின்றது.
யாழ்.பல்கலைக்கழக சித்த மருத்துவ துறையைச் சேர்ந்த வேதாரணியம் லதீஸ் என்ற மாணவன் நேற்று முன் தினம் மாலை முதல் காணாமல் போயுள்ளதாக சாவகச்சேரி காவற்துறையினரிடம் அவரது பெற்றோர் நேற்று முறைப்பாடு செய்திருந்தனர்.
இந் நிலையில் நேற்றிரவு அவர் கைதடியில் உள்ள தனது விடுதிக்குத் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.