யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதி மிகவும் கடுமையான முறையில் பாதிக்கப்பட்டுள்ளமையால் போக்குவரத்துச் செய்வதில் பொது மக்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.
குறிப்பாக மல்லாகம் இணுவில் மருதனார்மடம் பகுதிகளில் காணப்படும் வீதி மிகவும் மோசமான முறையில் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனையிட்டு உரிய நடவடிக்கையை வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் கண்டு கொள்ளாத நிலைமை தொடர்வதினால் போக்குவரத்து செய்வதில் பொதுமக்கள் பாரிய சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
வீதிக்கு வீதி கிடங்கும் பள்ளமுமாக காணப்படுவதினால் வாகனங்கள் வீதியோரங்களில் செல்ல முனைவதினால் பாரத்துடன் வரும் வாகனங்கள் வீதியோரங்களில் புதையுண்டு நிற்கும் நிலைமை நாளாந்தம் இடம்பெற்று காணப்படுகிறது.