கோப்பாய் தேசிய கல்வியற் கல்லுரியில் நடைபெறும் மாபெரும் கண்காட்சியில் யாழ் பல்லைக்கழக சித்தமருத்துவத்துறையின் பங்களிப்பில் மூலிகைகளும்,அவற்றின் உற்பத்திகளும்.
இன்று 16ம் திகதி தொடக்கம் 19ம் திகதி வரை தேசிய கல்வியற் கல்லுரியில் நடைபெறும் மாபெரும் கண்காட்சியில் யாழ் பல்லைக்கழக சித்தமருத்துவத்துறையின் குணபாடப் பிரிவு, மருந்துச் செய்முறைப் பிரிவு இணைந்து தங்களது காட்சிப் பொருட்களை காட்சிப்படுத்தவுள்ளனர்.இதில் ஏறத்தாள 300 ற்கும் மேற்பட்ட மூலிகை இனங்கள் நாற்றுக்கள் மூலம் காட்சிப்படுத்தப்படவுள்ளது.இவை இன்றைய மக்களின் தேவைகளை உணர்ந்து அதற்கேற்ற வகையில் முற்றுமுழுதாக மூலிகைகளைக் கொண்டு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன.அத்துடன் இம் மூலிகைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட அரிய பல மருத்துவ உற்பத்தி பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளது.