2011ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் இன்று காலை ஆரம்பமாகியுள்ளது.
ஆரம்பமாகியுள்ள இப் பரீட்சையில் பாடசாலைப் பரீட்சார்த்திகளாக 3 இலட்சத்து 85 ஆயிரம் பேரும், தனிப்பட்ட பரீட்சார்த்திகளாக ஒரு இலட்சத்து 46 ஆயிரம் பேருமாக 5 இலட்சத்து 31 ஆயிரம் மாணவர்கள் தோற்றுகின்றனர்.
க. பொ. த. சா/தரப் பரீட்சையில் கடந்த காலங்களை விடக் கூடுதலான மாணவர்கள் இம்முறை தோற்றுகின்றனர். கடந்த வருடத்தைவிட இவ்வருடம் 22 ஆயிரத்து 911 பரீட்சார்த்திகள் மேலதிகமாகத் தோற்றுகின்றனர் என்பதும் குறிப்பிடதக்கது.
இன்று ஆரம்பமாவுள்ள பரீட்சை டிசம்பர் 21ம் திகதியுடன் நிறைவுபெறுகின்றது.