மாணவர்களது கணித எண்ணக்கருவினை விருத்தி செய்யும் முகமாக அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையில் நாடாத்தப்பட்டு வருகின்ற கணித நாடகப்போட்டியில் வலிகாமம் கல்வி வலயத்தின் பாடசாலைகளுக்கிடையிலான கனீஸ்டபிரிவு போட்டியில்
மானிப்பாய் இந்துக்கல்லூரி அணி மூன்றாம் இடத்தினை பெற்றுக்கொண்டது.
மருதனார் மடம் இரமநாதன் கல்லூரியில் நடைபெற்ற மேற்படி போட்டியில் அறிவு என்னும் நாடகத்திற்கான எழுத்துருவாக்கம் நெறியாள்கையினை நாடகமும் அரங்கியலும் ஆசிரியர் எஸ்.ரி.அருள்குமரன் மேற்கொண்டார்.
நடிகர்களாக சானுஜன், கலைக்சன், தனுஸன், மிதுஸன், சிவானுஸன், சங்கீர்த்தன், தர்ஸன், திஸ்னுகன், ரசீபன். தர்சிகன், கனிஸ்ரன், சுஜி, கோபிராஸ், கீர்த்திகன், ஜெயகோபன் ஆகியோரும், அகில்ன் விதுசன் குகதாசன் ஆகியோர் இசைஞர்களாகவும் செயற்பட்டார்கள்.