உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சினால் அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் சிரேஷ்ட பிரிவில் யா/ சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவி செல்வி.றம்யா ஸ்ரீதரன் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
இவருக்கான சான்றிதழும் பணப்பரிசும் அனுராதபுரம் சுவர்ணபாலி மகளிர் மகாவித்தியாலயத்தில் அண்மையில் நடைபெற்ற பரிசளி ப்பு விழாவில் வைத்து ஜனாதிபதியினால் வழங்கப்பட்டது