Subscribe:Posts Comments

You Are Here: Home » கல்வி, யாழ்.செய்திகள் » எஸ்.எல்.ஐ.ஏ.ரி.பட்டமளிப்பு விழா யாழ்.மாணவர்கள் 252 பேர் பட்டம் பெறுகின்றனர்

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் யாழ்ப்பாண உயர் தொழில்நுட்பவியல் நிறுவனத்தைச் சேர்ந்த 252 பேர் பல்வேறு துறை ரீதியாக இன்று பட்டம் பெறுகின்றனர். இதில் உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா(HNDA) பட்டத்தினை 171 பேரும் உயர் தேசிய முகாமைத்துவ டிப்ளோமா பட்டத்தினை 32 பேரும் உயர்தேசிய தகவல் தொழில்நுட்ப டிப்ளோமா பட்டத் தினை 13 பேரும் உயர் தேசிய ஆங்கில டிப்ளோமா பட்டத்தினை11 பேரும் பெறுகின்றனர்.

இதில் ஏனைய உயர் தொழில்நுட்பவியல் நிறுவனங்களுடன் ஒப் பிடும்போது யாழ்ப்பாண உயர் தொழில்நுட்பவியல் நிறுவனத்தை சேர்ந் தவர்கள் பெருமளவு மாணவர்கள் பட்டம் பெற்று வெளியேறுவது குறிப்பி டத்தக்கது. மேலும் இன்று பட்டம் பெறுபவர்களதும் மற்றும் நிறுவனம் தொடர்பான தகவல்கள் மற்றும் கற்கைநெறி தொடர்பான தகவல்களை யாழ்ப்பாண உயர் தொழில்நுட்பவியல் நிறுவன பழைய மாணவர் சங்க www.jatialumni.org என்ற இணையத்தளத்தின் ஊடாகவும் அறிந்து கொள்ள முடியும் என பழைய மாணவர்சங்கச் செயலாளர் வி.தயாபரன் தெரிவித் துள்ளார்.

Leave a Reply

 
© 2010 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com