உடல் முழுவதும் எரிகாயங் களுக்குள்ளான நிலையில் பெண் ஒருவரும் பகுதியளவில் எரிகாயங்களுக்குள்ளான அவரது கணவரும் சிகிச்சைக் கென யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
காஸ் குக்கர் வெடித்ததால் எரிகாயங்கள் ஏற்பட்டது எனவும் பிறிதொரு சம்பவத்தால் எரிகாயம் ஏற்பட்டது எனவும் தெரிவிக்கப்படுகின்ற போதும் அதற்கான சரியான காரணம் தெரிவிக்கப்படவில்லை. இந்தச் சம்பவம் மயிலங்காடு, சூராவத்தை பகுதியில் உள்ள அவர்களது வீட்டில் இடம் பெற்றுள்ளது. இந்தச சம்பவத் தில் இதே இடத்தைச் சேர்ந்த நா.மயூரன்(வயது24), ம.கிருபா (வயது23) ஆகிய இருவருமே எரிகாயங்களுக்கு இலக்காகினர்.உறவினர்களால் குறித்த இரு வரும் உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.