வடக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்கழத்தினால் அபிவிருத்தியும் உள்ளூர் வழங்கல் என்னும் தொணிப் பொருளிலான கண்காட்சி இம்மாதம் 8ம், 9ம், 10ம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
கைதடியில் உள்ள உள்ளூராட்சி அமைச்சின் வளாகத்தில் நடைபெறவுள்ள இக் கண்காட்சி 4 பிரிவுகளைக் கொண்டுள்ளது. இதில் முயற்சியாண்மைக் கூடம், விற்பனைக் கூடம், சேவைக் கூடம், திறந்த வெளிக் கூடங்களாக அமையவுள்ளது என வடக்கு மாகாண கிராம அபிவிருத்திப் பணிப்பாளர் ஜே. ஜே. பெலிசியன் தெரிவித்தார்.