உரும்பிராயில் நேற்று முன்தினம் 2.00 மணியளவில் கடைக்குச் சென்றவர் நேற்றுவரை வீடு திரும்பவில்லை எனக் கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
உரும்பிராய் மேற்கு வைத்தியசாலையைச் சேர்ந்த சின்னத்துரை குகதாசன் (வயது 52) என்ற குடும்பஸ்தரே காணாமல் போயுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த குடும்பஸ்தர் நேற்று முன்தினம் பிற்பகல் 2.00 மணிக்கு விறகு வாங்குவதற்காகச் சென்றதாகவும் நேற்று வரை அவர் வீடு திரும்பவில்லை எனவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.