சுமார் இரு தசாப்த காலத்துக்கு முன் நாட்டுச் சூழ்நிலை காரணமாக யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்து சென்றிருந்த 150 சிங்களக் குடும்பங்கள் சொந்த இடங்களுக்கு திரும்பி வந்து குடியேற விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில்கள் அபிவிருத்தி அமைச்சர் ஆகியோரின் நேரடிக் கவனத்துக்கு இவ்விடயத்தைக் கொண்டு வந்துள்ளார்கள்.
சில நாட்களுக்கு யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்த இம்மக்கள் சிங்கள மகாவித்தியாலயத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றையும் நடத்தினர்.
யாழ்ப்பாணத்தில் 1984 ஆம் ஆண்டு வரை வாழ்ந்தமையை நினைவு கூர்ந்தார்கள். இம்மீள்குடியேற்றத்துக்கு அனைத்துத் தரப்பினரும் உதவி செய்ய வேண்டும் என்று கோரி உள்ளார்கள்.