இந்திய அரசினால் யாழ்.மாநகரசபைக்கு ஐந்து பஸ் வண்டிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.
இவற்றை யாழ்.மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசாவிடம் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில்கள் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று சம்பிரதாயபூர்வமாகக் கையளித்தார். அத்துடன் பஸ் ஒன்றை இயக்கி அவரே சேவையை ஆரம்பித்தும் வைத்தார்.