தைப்பொங்கல் தினத்தை கொண்டாடும் முகமாக யாழ்.பாதுகாப்பு படைகளின் தலைமையகத்தால் எதிர்வரும் 15ஆம் திகதி ஆணையிறவில் மாபெரும் விழா ஒன்றினை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆனையிறவு ஊடாக யாழ்ப்பாணத்திற்குள் பிரவேசிக்கும்- அதேபோன்று யாழ்ப்பாணத்திலிருந்து வெளிச்செல்லும் அனைவருக்கும் பொங்கல் பாற்சோறு மற்றும் தேநீர் வழங்கி உபசரிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், பல்வேறு கலாசார நிகழ்வுகளையும் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகப் பலாலி பாதுகாப்புப் படைகளின் தலைமையகம் அறிவித்துள்ளது.