Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » அல்லைப்பிட்டியில் அரச சொத்துக்களைச் சூறையாடும் திருடர்கள்

வேலணை பிரதேச சபையின் அல்லைப்பிட்டி உப அலுவலகம் கடந்த 2006 ஆம் ஆண்டு கூரைப் பகுதி கடுமையாகச் சேதமடைந்திருந்தது.

இதனால் பிறிதொரு வீடொன்றிலேயே அல்லைப்பிட்டி உப அலுவலகம் தற்போதும் இயங்கி வருகின்றது. இந் நிலையில் அல்லைப்பிட்டி அலுவலகத்தைச் சொந்த இடத்தில் இயங்க வைப்பதற்காக சுமார் 8 இலட்சம் ரூபாய் செலவில் மேற்படி கட்டடம் புனரமைக்கப்பட்டிருந்தது.

தற்போது அக் கட்டடத்தில் அலுவலகத்தை இயங்க வைப்பதற்கான முன் ஆயத்த வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது,

மேற்படி கட்டடத்திற்கு போடப்பட்டிருந்த புதிய நான்கு கதவுகள் திருடர்களால் கொள்ளையிடப்பட்டுள்ளன. இத் திருட்டுச் சம்பவத்தினையடுத்து அல்லைப்பிட்டி வாழ் மக்களுக்கான அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்வதென்பது வேலணை பிரதேச சபையினருக்குப் பெரும் சவாலாக அமைந்துள்ளது என மேற்படி சபை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

 
© 2011 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com