பாடசாலைகளுக் கிடையிலான தேசிய மட்ட தடகளப் போட்டிகளில் கோலூன்றி பாய்தல் போட்டியில் 19 வயதுப் பிரிவில் அளவெட்டி அருணோதயாக் கல்லூரி மாணவி எஸ்.தனுசா தங்கப்பதக்கம் வென் றார்.
அத்துடன் இதே பிரிவில் அள வெட்டி அருணோதயாக் கல்லூரி மாணவி ஆர்.ஜக்சனா வெள்ளிப் பதக்கம் வென்றார். பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட தடகளப் போட்டிகள் நேற்று கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் கோலாகலமாக ஆரம்பமானது.
ஆரம்ப விழாவில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். இதில் 19 வயது பிரிவினருக்கான கோலூன்றிப்பாய்தல் போட்டியில் அளவெட்டி அருணோதயாக் கல்லூரி மாணவி எஸ்.தனுசா 2.70 மீற்றர் உயரம் பாய்ந்து முதலிடத்தைப் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார்.
இதே பிரிவில் கடந்த வருடம் தேசியமட்ட தடகளப்போட்டிகளில் கோலூன்றி பாய்தலில் எஸ்.தனுசா 2.81 மீற்றர் உயரம் பாய்ந்து தேசிய மட்டத்தில் அதிகம் உயரம் பாய்ந்த சாதனை படைத்து தங்கப்பதக்கம் வென்றமை குறிப்பிடத்தக்கது. இந் நிலையில் நேற்று கடும் மழையின் மத்தியிலும் 2.70 மீற்றர் உயரம் பாய்ந்த தனுசா இரண்டாவது முறையாக தங்கப்பதக்கம் வென்றார்.
அத்துடன் இதே பிரிவில் அளவெட்டி அரு ணோதயாக் கல்லூரி மாணவி ஆர்.ஜக்சனா 2.50 மீற்றர் உயரம் பாய்ந்து இரண்டாமிடத் தைப் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார். கடந்த வருடம் 17 வயது பிரிவினருக்கான கோலூன்றி பாய்தல் போட்டியில் ஆர்.ஜக்சனா வர்ண விருது வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இம் மாணவிகள் இருவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ள வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன், வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ப.விக் னேஸ்வரன் ஆகியோர் மேலும் பல சாதனைகளை இவர்கள் படைத்து வடக்கு மாகாணத் திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என தெரி வித்துள்ளனர்.
நன்றி:வலம்புரி