Subscribe:Posts Comments

You Are Here: Home » யாழ்.செய்திகள் » அமுலுக்கு வருகிறது மின்வெட்டு: இருளில் மூழ்கப் போகிறது குடாநாடு

சுன்னாகம் மின்சார நிலையத்திலுள்ள மின் பிறப்பாக்கிகளில் பழுது ஏற்பட்டுள்ளதால் நாளை முதல் ஒன்றேகால் மணி நேர மின்வெட்டு அமுலுக்கு வருகிறது.

மின் பிறப்பாக்கிகள் சில பழுதாகியுள்ளதால் மின் உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்தே மின்வெட்டு அமுல் செய்யப்படுவதாக இலங்கை மின்சாரசபையின் யாழ்.பிரதேச மின் பொறியியலாளர் அறிவித்துள்ளார்.

மாலை 5 மணி முதல் இரவு 10.30 மணி வரை பகுதி பகுதியாக மேற்கொள்ளப்படும் இம் மின்வெட்டினால் யாழ்.குடாநாடு இருளில் மூழ்கப் போகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.மின்சார சபையினால் அறிவிக்கப்பட் டுள்ள மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ள நேரமும் பிரதேசங்களும் வருமாறு;

மாலை 18.00 – 19.15 உரும்பிராய், கோண்டாவில், தபால்பெட் டிச் சந்தி, கந்தர்மடம், ஆரியகுளம் பிரதேசம், கச்சேரியடி பிரதேசம், பாசையூர், குருநகர் 5 ஆம் மாடி வீட்டுத்திட்ட பகுதி, புங்கங்குளம்.

மாலை 19.15 – 20.15 புன்னாலைக்கட்டுவன், அச்செழு, புத்தூர், ஆவரங்கால், அச்சுவேலி, இடைக்காடு, வட மராட்சி பிரதேசம்.

மாலை 20.15 – 21.30 இணுவில், உடுவில், மருதனாமடம், தாவடி, கொக்குவில், நாச்சிமார் கோவிலடி, ஆனைக் கோட்டை, நவாலி, மானிப்பாய், சங்குவேலி, கோண்டாவில், கொட்டடி, கோம்பயன்மணல் பிரதேசம்,யாழ்.பட்டணப்பகுதி.

மாலை 21.30 – 22.30 கந்தரோடை, மாகியப்பிட்டி, பண்டத்தரிப்பு, இளவாலை, சங்கானை, மாதகல், வட்டுக் கோட்டை, சுழிபுரம், மூளாய், காரைநகர் பிரதேசம், தீவகப்பிரதேசம்,அராலி.

Leave a Reply

 
© 2010 Voice of Jaffna : யாழ்ப்பாணத்தின் குரல் · Subscribe:PostsComments · Designed by e-creatives · Contact info@jaffnavoice.com