அச்சுவேலி- தொண்டைமானாறு வீதி மூன்று வாரங்களில் மக்கள் பாவனைக்கு முழுமையாக திறந்து விடப்படும் என யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க உறுதிய ளித்துள்ளார்.
நேற்று யாழ்.ஆயர் இல்லத்தில் சமாதானத்துக்கும் நல்லெண்ணத்துக் குமான மக்கள் குழுவினருக்கும் யாழ். கட்டளைத் தளபதிக்கும் இடையில் நடை பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ் உறுதி மொழியை வழங்கினார்.
அச்சுவேலி- தொண்டைமானாறு வீதி 24 வருடங்களின் பின்னர் தொண்டைமா னாறு செல்வச்சந்நிதி ஆலய மகோற் சவத்தை முன்னிட்டு திறந்துவைக்கப் பட்டது. எனினும் திருவிழா நிறைவு பெற்று சில தினங்களுக்குபின் அவ்வீதி இராணுவத் தினரால் மூடப்பட்டது.இதுகுறித்து நேற்றைய சந்திப்பில் இரா ணுவத் தளபதியின் கவனத்துக்கு கொண்டு சென்ற போது; இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் அவ் வீதி முழு மையாக மக்கள் பாவனைக்கு திறந்து விடப்படும் எனவும் அதன் பின் வீதியைப் புனரமைப்பதற்கு முயற்சிக்கலாம் எனவும் கூறினார்.